குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-10-19 16:38 GMT

குப்பைகள் அகற்றப்படுமா?

தஞ்சை கீழவாசல் சுண்ணாம்புகாரத்தெருவில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்