குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-10-12 13:36 GMT


நாகை மாவட்டம் வாய்மேடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,வாய்மேடு

மேலும் செய்திகள்