சுகாதார கேடு

Update: 2022-10-02 17:54 GMT

சேலம் சித்தர் கோவில் மெயின்ரோட்டில் சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நிறைவு அடையாமல் உள்ளது. கடந்த 6 மாத காலமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஆனந்தி, பனங்காடு, சேலம்.

மேலும் செய்திகள்