வீணாகும் குப்பை தொட்டி

Update: 2022-10-02 17:26 GMT

தர்மபுரி ராமகொண்டஅள்ளி வீதிகளில் குப்பை தொட்டிகள் இல்லை. அரசு சார்பில் வழங்கப்பட்ட குப்பை தொட்டிகள் தேவை இல்லாமல் கிடக்கிறது. இதனால் பொது மக்களின் வரி பணம் வீணாகிறது. குப்பை தொட்டிகள் இல்லாததால் ஆங்காங்கே சாலைகளில் குப்பைகள் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே வீதிகளில் ஆங்காங்கே குப்பை தொட்டிகளை வைத்து குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

-சரவணன், தர்மபுரி.

மேலும் செய்திகள்