பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றலாமே

Update: 2022-09-30 16:21 GMT

தர்மபுரி மாவட்டம் அமனி மல்லாபுரம் ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகர், அமனி மல்லாபுரம், வட்டகானப்பட்டி, உப்பாரஅள்ளி, குஜ்ஜார அள்ளி, கடத்தி கொள்மேடு உள்ளிட்ட கிராமங்களில் சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பைகள் கழிவுநீர் கால்வாய்களில் ஆங்காங்கே கொட்டப்படுகிறது. அமனி மல்லாபுரம் அருகே பனந்தோப்பு பகுதியில் மலைபோல் குவித்து வைத்து எரிப்பதால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ்குமார், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்