சுகாதார கேடு

Update: 2022-09-29 16:35 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜெர்தலாவ் ஊராட்சி சனத்குமார் நதியில் பாலக்கோடு கடைதெருவில் இறைச்சி கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் இருந்து தினமும் வெளியாகும் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசவதுடன் நோய்பரவும் அபாயமும் உள்ளது. எனவே இங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்