சுகாதார கேடு

Update: 2022-09-27 17:12 GMT

நாமக்கல் மாவட்டம் மின்னாம்பள்ளி ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் எதிரில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டின் குப்பைகளை சாலையை தாண்டி பள்ளி கட்டிடங்களின் ஓரமாக கொட்டுகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார கேட்டால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமகோபாலன், அண்ணா நகர், நாமக்கல்.

மேலும் செய்திகள்