குப்பைகள் அள்ளப்படுமா?

Update: 2022-09-24 15:38 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா பூக்கொல்லையிருந்து முடசிக்காடு மற்றும் நாட்டாணிகோட்டை செல்லும் சாலையில் குறக்காளி அம்மன் கோவில் அருகில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நொய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பேராவூரணி.

மேலும் செய்திகள்