சுகாதார கேடு

Update: 2022-09-23 15:58 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா குருபசப்படி கிராமத்தில் அரசு அங்கன்வாடி பள்ளி உள்ளது. இங்கு 5 வயது வரையிலான குழந்தைகள் வந்து படித்து, உணவருந்தி செல்கின்றனர். பள்ளிக்கு அருகில் உள்ள நிலத்தில் கற்கள் கொட்டப்பட்டு வருவதால் அதன் துகள்கள் காற்றில் பறந்து குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இங்கு கற்கள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகர், சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்