மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி கிடக்கிறது.. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசுக்களும் உற்பத்தியாகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை தேங்க விடாமல் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், சீர்காழி