புகார்பட்டி எதிரொலி; குப்பைகள் அகற்றப்பட்டது

Update: 2022-09-21 12:44 GMT

 நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி ஊராட்சி மேலப்பிடாகை கடைத்தெருவில் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இருபுறமும் குப்பைகள் தேங்கி இருந்தது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவுத் அபாயம் இருந்து வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து வாய்க்காலில் தேங்கி கிடந்த குப்பைகளை பணியாளர்கள் அகற்றினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்