குப்பை கிடங்காக மாறிவரும் மழைநீர் கால்வாய்

Update: 2022-09-20 17:54 GMT

சேலம் சீரகாபாடி தனியார் மருத்துவ கல்லூரி அருகே கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து வீரபாண்டி ஏரி வரை மழைநீர் கால்வாய் செல்கிறது. அந்த வாய்க்காலில் மருந்து கழிவுப்பொருட்கள் மற்றும் குப்பைகள், கழிவு பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் அந்த பகுதி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் செல்லும் வாய்க்காலை தூர்வார வேண்டும்.

-சுகன்யா, சீரகாபாடி, சேலம்.

மேலும் செய்திகள்