குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-20 14:36 GMT


நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி ஊராட்சி மேலப்பிடாகை கடைத்தெருவில் வடிகால் வாய்க்கால் உள்ளது. வாய்க்காலில் இருபுறமும் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்