நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பள்ளிக்கூடம், தபால் அலுவலகம், மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. பல நாட்களாக குப்பைகள் அல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.