மயிலாடுதுறை மாவட்டம் வடகரை இக்பால் தெருவில் குப்பைகள் தேங்கி கிடப்பது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். இதனை அறிந்து அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர்.
இக்பால் தெரு, வடகரை.