நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை சாலையில் பல குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதன் அருகிலேயே சிறு கடைகள் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வேளாங்கண்ணி