சுகாதார சீர்கேடு

Update: 2022-09-01 08:45 GMT

திக்கணங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மீன்சந்தை வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை சரியாக பராமரிக்கப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவறையை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-விஜு, புதூர்.


மேலும் செய்திகள்