சேலம் உடையாப்பட்டி மின் அலுவலகம் அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உள்ளேயே பாரும் இயங்குகிறது. இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அருகில் உள்ள ஓடை மற்றும் அதன் கரையோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை ஓடையில் கொட்டாமல் முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரசேகரன், உடையாப்பட்டி, சேலம்.