மதுரை நகர் பழங்காநத்தம், மாடக்குளம் பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கின்றது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகின்றது. மேலும் இதில் எழும் துர்நாற்றத்தால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.