வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமம் அருகே ஏரிக்கரை உள்ளது. ஏரிக்கரையோரம் செல்லும் வந்தவாசி-மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையின் இரு பக்கங்களில் இரவில் கோழிக்கழிவுகள், அழுகிய வெங்காயங்களை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கழிவுகளால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தன், வந்தவாசி.