சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சில சாலைகளின் இருபுறங்களிலும் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?