கூத்தாநல்லூரில் உள்ள, லெட்சுமாங்குடி கடைவீதி சாலையோரம் உள்ள பனங்காட்டாங்குடி பாசன வாய்க்காலில் சாக்கடை கழிவு நீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. கழிவு பொருட்கள் அதில் கொட்டுவதால் எப்போதும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கடைவீதிக்கு சென்று வருவோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள், கூத்தாநல்லூர்,.