கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளை அச்சுறுத்துகின்றன. இதனால் சிலர் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சமூக ஆர்வலர், கிருஷ்ணகிரி.