திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் ஊராட்சியின் தக்கோலம் நெடுஞ்சாலையில் இருந்து ராமாபுரம் செல்லும் பாதையில் சாலை போடும் பணி சில மாதங்களுக்கு தொடங்கப்பட்டது. ஆனால் கற்கள் மட்டுமே நிரப்பட்டு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அந்த வழியே செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. மாநகராட்சி துறை அதிகாரிகள் கிடப்பில் உள்ள சாலைப்பணியை விரைந்து முடித்துதரவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.