மின் விளக்கு எரியுமா?

Update: 2024-01-07 13:44 GMT


தஞ்சை-நாகை சாலையில் ராஜீவ் நகர் அருகே உள்ள தெரு விளக்குகள் இரவில் எரிவதில்லை. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.மேலும் இருட்டாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகள் எரிவதற்குஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்