சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2026-08-16 13:58 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், படப்பை ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்தனஞ்சேரி காலனி காந்தி தெருவில், விநாயகர் கோவில் அருகே உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பாக, சாய்ந்த நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்