சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில் நெத்திமேடு செல்லும் சாலை கேட்டுக்காடு தெருவிற்கு திரும்பும் இடத்தில் சாலை சேதமடைந்தும், குண்டும், குழியுமாகவும் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்க உதவிய ‘தினத்தந்தி’க்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.