நாய்கள் பிடிக்கப்படுமா?

Update: 2024-01-07 13:42 GMT


தஞ்சையில் தொல்காப்பியர் சதுக்கம், ஆடக்காரதெரு, வண்டிக்கார தெரு போன்ற இடங்களில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். சாலையில் குறுக்கே நாய்கள் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தஞ்சையில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்