"தினத்தந்தி"க்கு பாராட்டு

Update: 2023-11-19 17:07 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி பிரதான சாலை ஓரத்தில் 2 உடைந்த மின் கம்பங்கள் போடப்பட்டு இருந். அந்த மின் கம்பங்களால் அந்த வழியே போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது என "தினத்தந்தி" புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த கம்பங்களை அப்புறப்படுத்தினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய "தினத்தந்தி"க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-நாராயணன், நாமக்கல்.

மேலும் செய்திகள்