நாய்கள் தொல்லை

Update: 2023-10-04 13:27 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலைய பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இரு சக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டி சென்று நாய்கள் கடித்து விடுகின்றன. மேலும் நிலை தடுமாறி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடிக்க வேண்டும்

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்