செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி ஊராட்சிக்குட்பட்ட உலகாத்தம்மன் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களிலும் தெரு விளக்குகள் எரிகின்றன. இதனால் மின்சாரம் வீணாகிறது. மேலும சில சமயங்களில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. சம்பந்தப்பட்ட மின்சார வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.