பன்றிகள் தொல்லை

Update: 2023-09-27 14:29 GMT


தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகர், இருபதுகண் பாலம் போன்ற இடங்களில் பன்றிகள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் காய்கறி செடிகளை சேதப்படுத்து விடுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் பன்றிகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்