கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-09-27 14:13 GMT


நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வேளாங்கண்ணி

மேலும் செய்திகள்