பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-09-20 14:04 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி ஊராட்சி முத்துப்பேட்டை சாலையில் வங்கி ஏ.டி.எம். எதிரில் மழைநீர் வடிகால் வாய்க்காலுக்கு தோண்டப்பட்டபள்ளம் மூடப்படாமல் இரும்பு கம்பிகள் நீட்டிக் கொண்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த வழியாக செல்லும் போது தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து பணியை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்