திருவாரூர் ஒன்றியம் திருவாதிரை மங்கலம் ஊராட்சி சூரனூர் மெயின் ரோட்டில் உள்ள தென்னைமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது. இதன் அருகில் குடியிருப்புள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விஷ வண்டுகளை அழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முகிலன், சூரனூர்