திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் பஸ் நிறுத்தத்தில் கடந்த சில மாதங்களாக கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் பஸ் வர தாமதமானால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குவோர்கள் என அனைவரும் வெயிலில் நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.