ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு வேலூர்-விளாப்பாக்கம், ஆற்காடு-ஆரணி வழியாக விளாப்பாக்கம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அரசு பஸ்கள் விளாப்பாக்கம் வருவதில்லை. ஏனெனில் இந்தப் பஸ்கள் சிறப்பு பஸ்களாக திருவண்ணாமலைக்கும், மேல்மலையனூருக்கும் திருப்பி விடப்படுகின்றன. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எங்கள் ஊருக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களை தடை படாமல் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகலிங்கம், விளாப்பாக்கம்.