கொடைக்கானல் அருகே பெருமாள்மலையில், அடுக்கம் மலைப்பாதை சோதனை சாவடி அருகே சாலையோரம் மரம், செடி, கொடிகள் இடையூறாக வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீதும், பஸ், ஜீப் உள்ளிட்ட பிற வாகனங்களில் செல்லும் மக்கள் மீதும் நீட்டிக்கொண்டிருக்கும் மரக்கிளைகள் பட்டு காயத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக கற்றாழை செடிகளின் முட்கள், பொதுமக்களை பதம் பார்த்து வருகின்றன. எனவே சாலையில் இடையூறாக வளர்ந்துள்ள மரம், செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.