பஸ் நிலையத்திற்குள் வராத பஸ்கள்

Update: 2026-06-28 17:04 GMT

நாமக்கல் புதிய பஸ் நிலையம் முதலைப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. பெங்களூரு, ஓசூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாமக்கல் வழியாக அரசு விரைவு பஸ்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த பஸ்கள் நாமக்கல் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதில்லை. அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகிலும் பயணிகளை ஏற்றுவதில்லை. இதனால் பயணிகள் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்கச்சாவடியில் நின்று பஸ் ஏறி பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே நாமக்கல் புதிய பஸ் நிலையத்திற்குள் அரசு விரைவு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்