சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பஸ் நிறுத்தம் மிக முக்கியமான இணைப்புப் பகுதியாக உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் தியாகராய நகர், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் வந்து செல்லும் இந்த பஸ் நிறுத்தத்தில் மேற்கூரை இல்லாமல் உள்ளதால் பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.