சென்னை அடையாறு மத்திய கைலாஷ் அருகே ஓ.எம்.ஆர் சாலை உள்ளது. இந்த சாலை எப்போதும் பரபரப்பான சாலை. இதன் அருகே ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரிகள் உள்ளன. எனவே இங்கு செல்லும் பொதுமக்களும் மாணவ-மாணவிகளும் இந்த சாலையை கடந்த செல்லவேண்டியுள்ளது. அதிகமான வாகனங்கள் வந்து செல்வதால் மக்கள் கடக்க மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை கடக்க நடைமேடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.