சேலம் மாநகராட்சி 19-வது வார்டு ஜாகீர்அம்மாபாளையம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் குப்பைகள் அள்ளாமல் குவிந்து இருந்தது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
-கண்ணபிரான்,சேலம்.