மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வடரங்கரத்தில் உள்ள மூங்கில் தட்டி பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மூங்கில் தட்டி பாலத்தில் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மூங்கில் தட்டி பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வடரங்கம்
=========================