தஞ்சை-நாகை சாலையில் உள்ள தொம்பன் குடிசை பகுதியில் உள்ள தொல்காப்பியர் சதுக்கம் நினைவு சின்னம் உள்ளது. இந்த சதுக்கத்தில் மேல் பகுதியில் கதண்டு வண்டுகள் கூடுகட்டி உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் சிறுவர்-சிறுமிகள் விளையாடுவதற்கு வருவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இங்கு உள்ள கதண்டு கூடுகளை அழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை