தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய்கள் கூட்டமாக சென்று சிறுவர்களை கடித்து விடுகின்றன. குறிப்பாக காமாட்சி ஜோசியர் தெருவில் அதிக அளவில் தெருநாய்கள் உள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து செல்ல அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கும்பகோணம்.
========================