கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-09-20 13:17 GMT


மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் சனீஸ்வரபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கொள்ளிடம்

மேலும் செய்திகள்