பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-09-20 13:12 GMT


மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு மயிலாடுதுறையிலிருந்து அரசு பஸ் மதியம் நேரங்களில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மதிய நேரத்தில் எந்த விதமான அரசு பஸ்சும் சரியாக வருவது இல்லை. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்கு செல்வதற்கு பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமணஞ்சேரி

மேலும் செய்திகள்