வர்ணம் பூசப்படுமா?

Update: 2023-09-17 14:26 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் புதிய வீட்டு வசதி வாரிய பிரதான சாலையில் இரண்டு வேகத்தடை அமைத்தார்கள்.ஆனால் வேகத்தடைகளின் மீது வெள்ளை வர்ணம் பூசவில்லை. உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூசி இரவில் பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிச்சந்திரன், பொன்னவராயன்கோட்டை.

மேலும் செய்திகள்