அன்றும்... இன்றும்...

Update: 2023-09-13 17:33 GMT

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் வாழவந்திநாடு ஊராட்சியில் ஊர்புறம் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த நிழற்கூடத்தை சுற்றி செடி கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. இதனால் அங்கு விஷ பூச்சிகள் நடமாட்டம் இருந்தது. இதுதொடர்பாக கடந் 4-ந் தேதி ‘தினத்தந்தி’யில் புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அந்த நிழற்கூடத்தை அகற்றி சுத்தம் செய்து செடி, கொடிகளை அகற்றினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த கொல்லிமலை ஊராட்சி நிர்வாகத்துக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும் மலைவாழ் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-கார்த்திக்ராஜா, கொல்லிமலை.

மேலும் செய்திகள்