கடைகள் திறக்கப்படுமா?

Update: 2023-09-13 13:52 GMT


நாகை புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு உள்ளது. இந்த கடைகள் திறக்கப்படாமல் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், குடிமகன்களுக்கு இந்த பகுதி திறந்த வெளி பாராக செயல்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடைகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்